– Mohamed Ajwath –
கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை (31-05-2018) மாலை 05:30 மணிக்கு Salwa Road இல் (Behind of Ansar city) அமைந்துள்ள “Phoenix Private School” இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கத்தாரில் தொழில்புரியும் கல்முனை பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 200 சகோதரர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இந்நிகழ்வானது கடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்து வாழும் முனையூர் உள்ளங்களை ஒன்று சேர்த்த உறவுப்பாலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்கள், இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த Gulf Federation for Kalmunai அமையத்தினை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் ! appeared first on Sri Lanka Muslim.