சுமார் 2 மில்லியன் கட்டார் ரூபாய்கள் செலவில் அடுத்த வருட ஆரம்பத்தில் டோஹாவின் துறைமுகம் கப்பல்கள் வந்து தரித்து செல்லுவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட உள்ளன.இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த மீள் அபிவிருத்தி பணியின் முதல் கட்ட நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இஸ்லாமிய நூதனசாலைக்கு அருகிலிருந்து Corniche இன் முடிவு வரை உள்ள பகுதிகளில் அனைத்து வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அதில் கால்வாய்கள் ஆழமாக்கவும் படும்.என தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் Jassim Seif Ahmed al-Sulaiti தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அவர்களை கவரும் வகையில் கப்பல் தரித்து நிறுத்த வசதிகள் செய்யப்படும் என சுற்று அபிவிருத்தி அதிகார சபையும் குறிப்பிட்டிருந்தது.
இன்னும் சில மாதங்களில் 30 கப்பல்க் தரித்து நிற்க வசதிகள் செய்யப்படவுள்ளன.அத்துடன் அடுத்த வருட இறுதியில் 2500 மேற்பட்ட பார ஊர்திளை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்படும்.இவ்வாறான பல அடிப்படை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
The post டோஹா துறைமுகம் 2 மில்லியன் செலவில் அபிவிருத்தி appeared first on Sri Lanka Muslim.